காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினர் உ.தனியரசு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வெள்ளக்கோவிலில் அதிமுக ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கூவத்தூரில் இருந்து வந்திருந்த கொங்கு இளைஞர் பேரவையின் காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினர் உ.தனியரசு, கட்சியினரின் கருத்துகளைக் கேட்டறிந்தார். இறுதியில், முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.