சென்னை: சட்டசபையில் எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கே சென்று கூறுவது என்று சபாநாயகர் தனபால் வேதனையுடன் கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக இன்று கூடிய சட்டசபை கூட்டத்தில் கடும் ரகளை ஏற்பட்டது. இருக்கை கிழிப்பு, மைக் உடைப்பு சம்பவங்கள் அரங்கேறியதால் சபை மதியம் ஒரு மணி வரைக்கும் ஒத்தி வைக்கபட்டது.
45 நிமிட ஒத்தி வைப்புக்குப் பிறகு சபை தற்போது மீண்டும் கூடியது. அப்பொழுது சபாநாயகர் தனபால் பேசியதாவது:
எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கே சென்று கூறுவது? என்னை கையைப் பிடித்து இழுத்து பணி செய்ய விடாமல் தடுக்கிறீர்கள். விதிகளின் படி சபையை நடத்தி செல்வதே எனது பணி.
இவ்வாறு தனபால் வேதனையுடன் கூறினார்.