கமல் சமீபகாலமாக நாட்டு நடப்பு விஷயங்கள் குறித்து ட்விட்டரில் தனது கருத்துகளை அளித்துவருகிறார். முக்கியமாக தமிழக அரசியல் குறித்து.
இன்றைய சட்டமன்ற நிகழ்வுகளை முன்வைத்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்கள் பின்வருமாறு:
இந்திய அரசியல் சூழலுக்கு (உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி) மார்க்கண்டேய கட்ஜு அருமையான தீர்வு வைத்திருக்கிறார். ஆனால் இந்தியாவின் அகிம்சை குறித்த எண்ணம் மாறிவிடும்.
மிகைப்படுத்துவதை ஊடகங்கள் குறைத்துக்கொள்ளவேண்டும். தமிழக சட்டமன்றத்தில் இதற்கு முன்பே மோசமான நிகழ்வுகள் நடைபெற்றதை நாம் பார்த்துள்ளோம். நான் உள்பட எல்லோரும் இப்போது ஏன் அதிர்ச்சியடைய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.