அவிநாசியில் உள்ள சபாநாயகர் தனபால் அலுவலகம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் கடும் அமளிக்கிடையே இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 122 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இந்நிலையில் திருப்பூர் அவிநாசியில் உள்ள சபாநாயகர் தனபால் அலுவலகம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இந்த தாக்குதலை நடத்தி தப்பியோடிவிட்டனர்.