காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை

மதுரையில் காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை: மதுரையில் காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த செல்வி மகள் சுவிதா(21). இவர் ஜெயங்கொண்டத்தில் மில்லில் வேலை பார்த்தபோது, தன்னுடன் பணிபுரிந்த மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த வருண்பாபு என்பவரை கடந்த ஆண்டு பதிவுத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின்பு மதுரை வசந்தநகர் மகாலட்சுமி தெருவில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடன் தொல்லை அதிகமாக இருப்பதால் வேலைக்குச் செல்லும்படி வருண்பாபு கட்டாயப்படுத்தி வந்தாராம். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
 இந்நிலையில் வருண்பாபு சனிக்கிழமை செல்விக்கு செல்லிடப்பேசி மூலம் தொடர்பு கொண்டு சுவிதா தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செல்வி அளித்தப் புகாரின்பேரில் சுப்ரமணியபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com