சாத்தூர் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
பற்றி எரிந்த தீயை அணைக்கும் தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர்.
பற்றி எரிந்த தீயை அணைக்கும் தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
சாத்தூர் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்பெருமாள் (43). இவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை இப்பகுதியில் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சனிக்கிழமை தீப்பெட்டி மற்றும் தீக்குச்சிகள் தயாரிக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த தீக்குச்சிகள் இருக்கும் அறைக்கு கோவில்பட்டியைச் சேர்ந்த தீக்குச்சி விற்பனையாளர்கள் கருப்பசாமி (50), ஆனந்த் (40) ஆகியோர் சென்று, தீக்குச்சியை எடுத்து மாதிரி பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த சமயத்தில், உராய்வின் காரணமாக அங்கு தீப்பற்றிக் கொண்டது. சிறிது நேரத்தில் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதையடுத்து தகவலறிந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர், விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது. இதன் பின்னர், அங்கு பார்த்த போது கருப்பசாமி மற்றும் ஆனந்த் இருவரும், தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தது தெரிய வந்தது.
பின்னர் போலீஸார் அவர்களின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த தீ விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com