காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டம்: மத்திய அரசு அனுமதி

காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு  அனுமதி அளித்துள்ளது.
காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டம்: மத்திய அரசு அனுமதி


புது தில்லி: காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு  அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலைத் தொடர்ந்து காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன்  திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக பாரத் பெட்ரோ ரிசோர்சஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு உரிமம் வழங்க உள்ளது. அதன்படி, சுமார் 10 சதுர கி.மீ. அளவுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கும்.

இந்த திட்டத்தால், நிலத்தடி நீர் குறையும், விவசாயம் பாதிக்கப்படும் என்று ஏராளமான விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com