சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்தது.
மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை வாய் மொழியாக இந்த முறையீடு வைக்கப்பட்டது.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ரமேஷ், திமுகவின் முறையீடு மனுவாக தாக்கல் செய்யப்பட்டால் நாளை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்று அறிவித்தார்.