காஞ்சிபுரம்: மதுராந்தகம் அடுத்த பெளஞ்சூர் பகுதியைச் சேர்ந்த தபால் ஊழியர் கோவிந்தசாமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
தபால் ஊழியரான கோவிந்தசாமி இன்று காலை வயலுக்கு சென்றபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.