அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி ('ஏசி டெக்') நாட்டு நலப்பணித் திட்டம், அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் உள்நாட்டு அரிசி வகைகள் கண்காட்சி, வரும் மார்ச் 4-இல் உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், 100-க்கும் மேற்பட்ட அரிசி வகைகள், மூலிகைகள், தானியங்கள் சேகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளன. நிபுணர்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சிலம்பாட்டம், தெருக்கூத்து, கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இயற்கை வேளாண்மை, இயற்கை மருத்துவம், ஆய்வறிக்கைகள், தகவல்கள் மற்றும் தரவுகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன.