மூலிகை வாரியத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வலியுறுத்தல்

மூலிகை விவசாயிகள், மாநில மூலிகை தாவர வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலிகை வாரியத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வலியுறுத்தல்

மூலிகை விவசாயிகள், மாநில மூலிகை தாவர வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மூலிகை தாவர வாரியத்தின் உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.
தமிழ்நாடு மாநில மூலிகை தாவர வாரியம் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தின் மூலம் மூலிகை சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்த தேவையான நிதி உதவி மற்றும் மானியம் போன்றவை தேசிய மூலிகை தாவர வாரியத்திடம் இருந்து பெற்று அளிக்கப்படுகிறது. மூலிகை தாவர வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கே நிதியுதவி கிடைக்கும்.
எனவே, மூலிகை விவசாயிகள், மூலிகை சேகரிப்பவர்கள், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள், தொழில் முனைவோர், மருந்து உற்பத்தியாளர்கள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவை இதில் உறுப்பினர்களாகப் பதிவு செய்யலாம்.
இதற்கான விண்ணப்பங்களை தேசிய மூலிகை தாவர வாரியத்தின் ஜ்ஜ்ஜ்.ய்ம்ல்ட்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை நேரிலோ, தபால் மூலமாகவோ சமர்ப்பித்து, கட்டணத்தை வரைவோலை மூலம் செலுத்த வேண்டும்.
உறுப்பினருக்கான பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டுக்கான உறுப்பினர் பதிவு பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com