ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என மு.க. ஸ்டாலின் கூறிய கருத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா பற்றி காழ்ப்புணர்ச்சியோடு விமர்சனம் செய்வது துரதிர்ஷ்டமானது. ஜெயலலிதாவை தமிழக மக்களின் மனங்களில் இருந்து அகற்ற முடியாது. விமர்சிப்பதை நிறுத்திவிட்டு மக்களுக்கு பயனுள்ள வேலையை செய்ய வேண்டும். மக்களை பற்றி சிந்தித்து மக்களுக்காகவே வாழ்ந்தவர் ஜெயலலிதா. அகற்றும் நிலை உருவானால் ஜெயலலிதா படத்தை தொண்டர்கள் வைப்பார்கள்.
ஜெயலலிதா படத்தை அகற்றாவிட்டால் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.