கோவை: கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி - சிவன் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.
கோவையை அடுத்த வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் ஆதியோகி - சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கோவையில் இருந்து தனி விமானத்தின் மூலம் தில்லிக்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து ஆளுநரும் விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.