திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே படகு கவிழ்ந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மீனவர் படகில் சென்ற சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர். அப்போது, மணப்பாடு அருகே படகு சென்றுகொண்டிருந்தபோது கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படகில் பயணித்த 30 பேரில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2 சிறுமிகள் உள்பட 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மாயமான சிலரை மீனவர்கள் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
காற்றின் வேகம் அதிகரித்தால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் 7 பேர் மட்டுமே செல்லக்கூடிய படகில் 30 சென்றதால் விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட அனைவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.