பாஜக மூத்த தலைவர்  அத்வானி கோவை வருகை

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி சனிக்கிழமை கோவை வந்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி சனிக்கிழமை கோவை வந்தார்.
கோவை அருகே உள்ள ஈஷா யோக மையத்தில் 112 அடி உயரம் கொண்ட ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், ஈஷா யோக மையத்தில் 2 நாள் தங்குவதற்காக அத்வானி விமானம் மூலம் சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் கோவை வந்தார். அங்கு அவரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதன் பின்னர், அவர் கார் மூலம் பலத்த பாதுகாப்புடன் ஈஷா யோக மையம் சென்றடைந்தார். அத்வானியுடன், அவரது மகள் பிரதீபா, குடும்ப மருத்துவர், நண்பர், பாதுகாவலர் உள்ளிட்ட 5 பேர் கோவை வந்தனர். அத்வானியின் வருகையை ஒட்டி, அவிநாசி சாலை, திருச்சி சாலை, பேரூர் சாலை, ஆலாந்துறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் காவல் துறையினர் சனிக்கிழமை காலை முதலே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அவர் கோவையிலிருந்து திங்கள்கிழமை மாலை புது தில்லி செல்ல உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com