சென்னை: குழந்தைகளுக்கான ரூபெல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மாநில சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குழந்தைகளுக்கான ரூபெல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 77 லட்சம் குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகளில் ரூபெல்லா தடுப்பூசி போடப்படும்.
மருத்துவ பணியாளர்களுக்கு விடுப்பு இல்லாமல் தொடர்ந்து 15 நாட்களுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்படும்
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.