உயிரிழந்த 8 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதியை வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நாகை திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்த பாவாடை மகன் சந்திரகாசன், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த பிச்சை மகன் முனியசாமி, காஞ்சிபுரம் மாவட்டம் சட்ராஸ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் பாஸ்கரன், புதுப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் பிரதாப், திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி கிராமத்தைச் சேர்ந்த சூசை மகன் அந்தோணிசாமி, நாகை மாவட்டம், நம்பியார் நகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த இருசப்பன் மகன் முருகானந்தம்,
விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் மகன் ராமலிங்கம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் குணசேகரன் ஆகிய 8 பேர் தனித்தனி சம்பவவங்களில் வெவ்வேறு நாள்களில் மீன்பிடித்தபோது, தவறி விழுந்து இறந்தனர்.
இவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, 8 பேரின் குடும்பங்களுக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.