புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயம் அழிவதை வேடிக்கை பார்க்க முடியாது என்றார் "பசங்க' திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ்.
புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மேலும் அவர் கூறியது:
மாவட்டத்தில் விவசாயமே கேள்விக்குறியாகியுள்ள நிலையில், நெடுவாசல் போன்ற சில பகுதிகளில் நடைபெறும் விவசாயத்தை அழிக்கச் செய்யும் முயற்சியை வேடிக்கை பார்க்க முடியாது. இதை நான் இந்த மாவட்டத்தில் பிறந்தவன், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற உரிமையில் கூறுகிறேன். திரைப்படத் துறையில் இருந்தாலும், இந்த மாவட்டத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்பதே எனது எண்ணமும், திட்டமும். நானும் புதுக்கோட்டை மண்ணுக்குச் சொந்தக்காரன் என்பதால், இப்பிரச்னையில் தலையிட அதிக உரிமை உள்ளது என்றார்.