நீதிபதியின் அறிவுரையை ஏற்று சசிகலாவுக்கு எதிரான மனு வாபஸ்

அதிமுக தாற்காலிகப் பொதுச் செயலராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நலன் மனு, நீதிபதியின் அறிவுரையை ஏற்று வாபஸ் பெறப்பட்டது.
நீதிபதியின் அறிவுரையை ஏற்று சசிகலாவுக்கு எதிரான மனு வாபஸ்


சென்னை: அதிமுக தாற்காலிகப் பொதுச் செயலராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நலன் மனு, நீதிபதியின் அறிவுரையை ஏற்று வாபஸ் பெறப்பட்டது.

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து, அவரது தோழி சசிகலா, அதிமுக தாற்காலிகப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், அதிமுகவில் தாற்காலிகப் பொதுச் செயலர் நியமனத்துக்கு கட்சி விதிகளில் இடமில்லை என்று கூறி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்பி. கே.சி. பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, உட்கட்சி விவகாரம் குறித்து ஏன் பொது நலன் மனு தாக்கல் செய்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும், நீதிபதிகளின் அறிவுரையை ஏற்று பொது நலன் மனுவை கே.சி. பழனிசாமி வாபஸ் பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com