புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் அமீர் செய்தியாளர்களிடம் கூறியது:
வறட்சியால் தமிழகம் பாலைவனமாகி வரும் நிலையில், மீத்தேன் எரிவாயுவை எடுத்து தமிழகத்தை நிரந்தரமாக பாலைவனமாக மாற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. வறட்சி பாதிப்புக்கு நிவாரணம் வழங்காத மத்திய அரசு, மக்களை பாதிக்கும் வகையிலான இந்தத் திட்டத்தை தமிழக மக்களிடம் திணிக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம், மத்திய அரசு தமிழக விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்றார்.