பருவநிலை மாற்றங்களை அறிந்து அதற்கேற்ப விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் வலியுறுத்தி உள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காலநிலை இடர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. உழவர் வயல்வெளிப்பள்ளி, வயல்தின விழா என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காலநிலை மாற்றங்கள் மற்றும் அதனை எதிர்கொள்ள விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
விவசாயிகள் வானிலை அறிக்கைகளை நன்கு கேட்டறிந்து அதன்மூலம் விவசாயத்தில் புதிய யுக்திகளை கையாண்டு விவசாயப் பணிகளை மேற்கொள்ளை வேண்டும். அவ்வாறு பருவநிலை மாற்றங்களை அறிந்து விவசாயம் செய்வதால் பாதிப்புகளை குறைக்க முடியும் என்று கூறினார்.