கட்டாய விடுமுறைப் பட்டியலில் பொங்கல் திருநாளை மத்திய அரசு மீண்டும் சேர்த்துள்ளதற்கு திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து பொங்கலைக் கட்டாய விடுமுறைப் பட்டியலில் மத்திய அரசு இப்போது மீண்டும் சேர்த்திருக்கிறது. இதனை வரவேற்கிறேன். இது திமுகவின் போராட்ட அறிவிப்புக்குக் கிடைத்த வெற்றி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கட்டாய விடுமுறைப் பட்டியலில் பொங்கலை மீண்டும் சேர்க்கக் கோரி திமுக சார்பில் புதன்கிழமை (ஜன.11) நடைபெற இருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.