தமிழர் திருநாளான பொங்கலுக்கு முந்தைய நாள் போகி பண்டிகை என்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது, தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருள்களை தீயில் போட்டு எரிப்பது வழக்கம்.
பொங்கல் பண்டிகைக்கு முன்பு "பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற கருத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. நல்ல எண்ணங்கள் புகுந்து, தீய எண்ணங்கள் அகல வேண்டும் என்பதே இதன் பொருள்.
இத்தகைய நாளான போகியன்று (வெள்ளிக்கிழமை) சென்னை புத்தகக் கண்காட்சிக்கு ஏராளமான வாசகர்கள் வந்து நூல்களை வாங்கிச் சென்றனர்.
மேலும், விடுமுறை தினம் என்பதால், காலை 11 மணிக்கே புத்தகக் கண்காட்சி தொடங்கியது. இதனால், பலர் குடும்பத்துடன் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.