பண மதிப்பு நீக்க நடவடிக்கைக் கண்டித்து, தமிழகத்தில் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்காக முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இணைத் தலைவராக முன்னாள் எம்பி கே.எஸ்.அழகிரியும், அமைப்பாளராக முன்னாள் எம்பி ஜே.எம்.ஹாரூணும், கட்சி நிர்வாகிகள் விசுவநாதன், கே.கோபிநாத், கே.சிரஞ்சீவி, எம்எல்ஏக்கள் விஜயதரணி, ஜே.ஜி.பிரின்ஸ் உள்பட 15 பேர் செயல்படுவர். இந்தத் தகவலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.