துணைவேந்தர் நியமன விதிமுறை சிக்கலுக்குத் தமிழக அரசு உரிய தீர்வு காண வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்தச் சங்கத்தின் பொதுச் செயலர் பசுபதி வெளியிட்ட அறிக்கை:-
மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இழுபறி நீடித்து வருகிறது.
இந்தப் பணிக்கு இணைப் பேராசிரியர்களும் விண்ணப்பிக்கலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பும் உள்ளது. இதற்கு எதிராக விதிகளை மீறி தெரிவுக் குழு வெளியிட்ட அறிவிப்பு உள்ளது.
இந்தப் பிரச்னையில் தலையிட்டு, இணைப் பேராசிரியர்களும் விண்ணப்பிக்க அனுமதிக்கும் வகையில் உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.