ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமாகா சார்பில் சென்னையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டியை உடனடியாக நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமாகாவினர் தியாகராய நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் இருந்து மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மனிதச் சங்கிலி போராட்டத்தைத் துவக்கி வைத்தார். மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உள்பட ஏராளமானோர் இப்போராட்டத்தில்
பங்கேற்றனர்.