முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில் கூறியிருப்பது:-
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதல் கட்டமாக 142 அடி அளவுக்கு உயர்த்தியது தமிழக அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாகும்.
மறைந்த ஜெயலலிதா காட்டிய பாதையைப் பின்பற்றி, இந்த அணையின் முழுக் கொள்ளளவான 152 அடி வரை நீர்மட்டத்தை மேலும் உயர்த்தி, தென் தமிழ்நாட்டுக்குத் தேவையான தண்ணீரை தருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.