சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஆங்காங்கே வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது பேஸ்புக்கில் இன்று காலை பதிவிட்டிருப்பதாவது, தமிழகத்தில் இன்றைய வானிலை இதமாக இருக்கும். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிசயமாக மழை பொழியப் போகிறது. சிவகங்கை மாவட்டம் கடந்த மாதத்தை போலவே மழையால் நனையப் போகிறது.
இன்றைய வானிலைப் படி தென் மாவட்டங்களான திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த பகுதிகளில் இருந்து புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு மழை பரவலாம்.
சென்னையை பொறுத்த வரையில் வருகின்ற ஜூலை 6-8 தேதிகளில் மழையை எதிர் பார்க்கலாம். இதில் ஏதாவது ஒரு நாளில் நல்ல மழையை எதிர் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.