பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நாளை நடத்துவதாக இருந்த வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைப்பதை எதிர்த்து நாளை (ஜூலை 12) வேலைநிறுத்தம் நடைபெறும் என பெடரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், வருகிற ஒன்றாம் தேதி வரை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.