சென்னை பேக்கரியில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு

சென்னை கொடுங்கையூர் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பேக்கரியில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு

சென்னை கொடுங்கையூர் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

சென்னை கொடுங்கையூரில் உள்ள பேக்கரி ஒன்றில் நேற்று முன்தினம் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது சிலிண்டர் வெடித்ததில் தீயணைப்புத்துறை வீரர் ஏகராஜ் (50) உயிரிழந்தார். மேலும் போலீஸார், பொதுமக்கள், ஊர்க் காவல் படையினர் உள்பட 48 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் படுகாயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு பேர் இன்று காலை உயிரிழந்தனர். இதையடுத்து கொடுங்கையூர் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com