தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு: 234 பேர் வாக்களித்தனர்; கருணாநிதி வாக்களிக்கவில்லை

தமிழக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதில் 232 ஏம்எல்ஏக்கள் உட்பட 234 பேர் வாக்களித்தனர்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு: 234 பேர் வாக்களித்தனர்; கருணாநிதி வாக்களிக்கவில்லை


சென்னை: தமிழக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதில் 232 ஏம்எல்ஏக்கள் உட்பட 234 பேர் வாக்களித்தனர்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலைக் குறைவு காரணமாக வாக்களிக்க வரவில்லை. அவர் வாக்களிக்க வர வாய்ப்பில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 2 மணி நேரத்துக்குள் முடிவடைந்தது. கேரள எம்எல்ஏ அப்துல்லா, பாஜக எம்.பி. பொன். ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் பழனிசாம் உட்பட 232 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர்.

இதையடுத்து மதியம் 12 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com