சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்த ஏர் இந்தியன் எக்ஸ்பிரஸ் விமான பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறையினர் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மதுரையைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் பிரபாகரன் ஆகியோர் முறையே 100 மற்றும் 80 கிராம் முற்றுப்பெறாத தங்க நகைகளை தங்களின் உடைமைகளுக்குள் மறைத்து கடத்தி வந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றின் மதிப்பு ரூ. 5 லட்சமாகும்.