பணியின்போது உயிரிழக்கும் தீயணைப்புத் துறையினருக்கான உதவித் தொகை உயர்வு: பழனிசாமி

தீ விபத்துகளைக் கட்டுப்படுத்தும் பணியின் போது உயிரிழக்கும் தீயணைப்புத் துறை வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
பணியின்போது உயிரிழக்கும் தீயணைப்புத் துறையினருக்கான உதவித் தொகை உயர்வு: பழனிசாமி

சென்னை: தீ விபத்துகளைக் கட்டுப்படுத்தும் பணியின் போது உயிரிழக்கும் தீயணைப்புத் துறை வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதல்வர் பழனிசாமி இதற்கான அறிவிப்பினை வெளியிட்டார். அதாவது, தீ விபத்துகள் நேரிடும் போது அதனை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் தீயணைப்புத் துறை வீரர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக இதுவரை வழங்கப்பட்டு வந்த ரூ.5 லட்சம் நிதியுதவி, ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

காவல்துறையினருக்கு இணையாக, தீயணைப்புத் துறையினருக்கான உதவித் தொகையும் உயர்த்தப்படுவதாக முதல்வர் பேரவையில் அறிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com