முதல் வாக்கைச் செலுத்தினேன்: முதல்வர் பழனிசாமி பேட்டி

குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல் வாக்கைச் செலுத்தியதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல் வாக்கைச் செலுத்தியதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குப் பதிவு தொடங்கியதும் முதல் வாக்காக முதல்வர் பழனிசாமி தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
வாக்களித்து விட்டு வெளியே வந்த பிறகு அவர் அளித்த பேட்டி: குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல் வாக்கைச் செலுத்தியுள்ளேன். யாருக்கு வாக்களித்தேன் என்பதைத் தெரிவிக்க முடியாது. ஏனென்றால் அது ரகசிய வாக்கு. இந்த வாக்குகளை எல்லாம் தில்லியில் வைத்து எண்ணி பின்னர் முடிவு அறிவிக்கப்படும்.
அ.தி.மு.க.வைப் பொருத்தவரை யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ஏற்கெனவே அறிவித்திருக்கிறோம். அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குச் சாவடி முகவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com