குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் வேகத்துடன் வாக்களித்ததாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் திங்கள்கிழமை வாக்களித்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு சரியாக காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதல்வர் தனது வாக்கை முதலாவதாகப் பதிவு செய்தார். சாதாரண மக்கள் வாக்களிக்கும் வேகத்தைவிட எம்.எல்.ஏ.க்கள் வேகமாக வாக்களித்து வருகின்றனர். இப்படி அவர்கள் ஆர்வம் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.