பெங்களூரு: சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க இன்று தினகரன் பெங்களூரு சென்றார். தாமதமாக வந்ததாக கூறி சிறைத் துறையினர் அவருக்கு அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக் காவலர்களுடன் டி.டி.வி.தினகரன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். சிறை வளாகத்தில் இருந்து 500 மீ. முன்பே டி.டி.வி.தினகரனின் கார் நிறுத்தப்படதற்கு அவர் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.
கார் தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து சிறை வளாகம் உள்ளே அவர் நடந்து சென்றார். இதுநாள் வரையில் சிறை வளாகத்துக்குள் காரில் தினகரன் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.