குண்டர் சட்டத்தில் கைதான மாணவி வளர்மதி பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம்

குண்டர் சட்டத்தில் கைதான இதழியல் மாணவி வளர்மதி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குண்டர் சட்டத்தில் கைதான மாணவி வளர்மதி பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம்


சேலம்: குண்டர் சட்டத்தில் கைதான இதழியல் மாணவி வளர்மதி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கதிராமங்கலத்தில்  இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் எனக் கூறி சேலத்தில் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததாக இயற்கை பாதுகாப்புக் குழு என்ற அமைப்பைச் சேர்ந்த இதழியல் மாணவி வளர்மதியை சேலம் போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் சேலம் மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், குண்டர் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,  ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் எனக் கூறி போராடி குண்டர் சட்டத்தில் கைதான இதழியல் மாணவி வளர்மதி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி, அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com