சென்னை: சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், மெட்ரோ ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி அழைப்பைத் துண்டித்துவிட்டார்.
இதையடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதற்குள், தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, மிரட்டல் விடுத்த கல்யாணசுந்தரத்தை, செனாய்நகரில் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.