சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் குழுக்களிடையே அடிதடி, மோதல்!

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், இன்று காலை அக்கட்சியின் மகளிர் அணி மற்றும் இதர குழுக்களிடையே நிகழ்ந்த மோதலில், சத்தியமூர்த்தி பவன் போர்க்களமானது.
சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் குழுக்களிடையே அடிதடி, மோதல்!

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், இன்று காலை அக்கட்சியின் மகளிர் அணி மற்றும் இதர குழுக்களிடையே நிகழ்ந்த மோதலில், சத்தியமூர்த்தி பவன் போர்க்களமானது.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், இன்று காலை அக்கட்சியின் மகளிர் அணியான மஹிளா காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மஹிளா காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மகளிர் அணியில்  பதவிகளை ஒதுக்குவது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.

பின்னர் தங்கள் கோரிக்கைகளை மனுவாக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசாரிடம் அளிப்பதற்காக அவர்கள் முயன்றனர்.அப்பொழுது காங்கிரசின் பிற அணி நிர்வாகிகள்,அவர்களை மனு கொடுக்க விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டனர். அத்துடன் சத்தியமூர்த்தி பவனுக்கு வெளியே ப்ளக்ஸ் போர்டுகளை வைத்தது தொடர்பாகவும் தகராறு துவங்கியது.   

இதனால் மகளிர் அணி மற்றும் இதர குழுக்களிடையே வாக்குவாதம் தொடங்கியது. பின்னர் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். ஆபாச வசவுகளும் அரங்கேறின.சிறிது நேரத்தில் இந்த மோதல் ஒரு முடிவுக்கு வந்தது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தகராறில் ஈடுபட்ட  இரண்டு குழுக்களிடமும் விசாரிக்க உள்ளதாகவும், கட்சிக்கு அவப்பெயர் வரும்படி தவறை செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com