செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
சென்னை கடற்கரை நோக்கு வந்த மின்சார ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே இன்று திடீரென தடம்புரண்டது. தடம்புரண்ட 6ஆவது பெட்டியை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.