புதுச்சேரி: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக முக்கிய துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிக்கும் தூர அறிவிப்பாக புதுச்சேரி, காரைக்கால், கடலூர், எண்ணூர், நாகை, தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் இன்று 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.