கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறவுள்ள சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பங்கேற்கிறார்.
கோவை வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் 3-ஆவது சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மையத்தில் அமைந்துள்ள 112 அடி ஆதியோகி சிலை முன்பு ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பங்கேற்கிறார்.