சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தில் வினா எழுப்ப வாய்ப்பு தரப்படாததால் கோபமடைந்த அதிமுக எம்.எல்.ஏ., அவையில் இருந்து வெளியேறினார்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, ஆறாவது கேள்வியாக சுகாதாரத் துறை தொடர்பான கேள்வியை நிலக்கோட்டை எம்.எல்.ஏ., தங்கதுரை எழுப்பினார்.
அப்போது, அதிமுக எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச் செல்வன் துணைக் கேள்வி எழுப்ப வாய்ப்புக் கேட்டார். அவருக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் வாய்ப்பு மறுத்தார். இதையடுத்து, கோபமடைந்த அவர் பேரவையில் இருந்து திடீரென வெளியே சென்றார்.
சிறிது நேரத்தில் மீண்டும் அவைக்கு வந்து பேரவை நடவடிக்கைகளில் முழுமையாகக் கலந்து கொண்டார்.