தூத்துக்குடியைச் சேர்ந்த தா. திரேசம்மாள் (93), திங்கள்கிழமை (ஜூன் 19) அதிகாலை காலமானார்.
அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள், தூத்துக்குடி அரசு மருத்துவமனை எதிரே மணி நகர் 2 ஆவது தெருவில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
திரேசம்மாளுக்கு 'தினமணி' தாம்பரம் செய்தியாளர் மனோபாரதி உள்பட 5 மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். தொடர்புக்கு: 94444 71470.