புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறவுள்ள சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கடற்கரைச் சாலையில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
3-வது சர்வதேச யோகா தினம் நாளை கடைபிடிக்கபப்டுவதையொட்டி புதுச்சேரி சுற்றுலாத்துறை மெகா யோகா தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர், முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளார்கள்.
இதில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
இதனையொட்டி கடற்கரைச் சாலையில் காலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் யோகாசன ஒத்திகையில் ஈடுபட்டார்கள். இதை முன்னிட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.