யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் தேவாரம் கிராமத்தின் முருகன் மகன் அழகேசன், காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம் பேலக்கரை கிராமத்தின் வெங்கடேஷ், எதிர்பாராமல் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம், வனத்துறை மூலம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தனது அறிவிப்பில் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.