சென்னை: மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 3வது வாரத்தில் தொடங்கும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானதை அடுத்து மருத்து மாணவர் சேர்க்கைக்கான பணிகளை சுகாதாரத்துறை தொடங்கியுள்ளது.
நீட் தேர்வின்படியே மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடைபெறும். அடுத்த ஒரு வாரத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். ஜூலை 3வது வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.