திண்டுக்கல்: அதிமுக கவுன்சிலர் இக்பால் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பங்களாபேட்டையில் உள்ள அதிமுக கவுன்சிலர் இக்பால் வீட்டில் மர்ம நபரிகள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

திண்டுக்கல்: பங்களாபேட்டையில் உள்ள அதிமுக கவுன்சிலர் இக்பால் வீட்டில் மர்ம நபரிகள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

திண்டுக்கல்: பங்களாபேட்டையில் 38வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்து வருகிறார் இக்பால். இவரது வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இன்று காலை பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றுள்ளனர். அந்த பெட்ரோல் குண்டு வெடிக்காத காரணத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதுகுறித்து திண்டுக்கல் காவல்நிலையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி அதிமுக கட்சியினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com