திருவண்ணாமலையில் வரும் 30-ஆம் தேதி நடைபெறும் எம்ஜிஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார்.
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில், எம்ஜிஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி செயல்வீரர்கள் கூட்டம், உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் 30-ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகிக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.வனரோஜா வரவேற்கிறார். தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகிறார்.
முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.பொன்னுசாமி, மாவட்டப் பொருளாளர் ஏ.பி.சுபாஷ் சந்திரபோஸ், முன்னாள் எம்எல்ஏக்கள் ஏ.கே.அரங்கநாதன், ஆர்.எம்.பாபு முருகவேல், வி.கண்ணன், டி.சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இதற்கான மேடை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. பல ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.