ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர், முதல்வர் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்: சகிப்புத்தன்மை, உண்மையான வாழ்க்கை, ஈகை, இரக்கம் ஆகியவற்றையே புனித நூலான குரான் வலியுறுத்துகிறது. அமைதி, ஒற்றுமை, இணக்கமானச் சூழலை உருவாக்க முகமது நபிகளின் போதனைகளை பின்பற்றி வாழ்வோம்.
இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: இறைவனின் அருளைப் பெறுவதற்காக இந்தப் புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து, ஈகை குணங்களை வளர்த்து, இறை சிந்தனைகளை மனதில் நிறுத்தி ரமலான் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடுகின்றனர்.
இந்தப் பெருநாளில் உலகில் அமைதி நிலவவும், அன்பு தழைக்கவும் வாழ்த்துவதோடு, இஸ்லாமியர்களுக்கு ரமலான் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.